அகத்தியப்பெருமான் அருள்வாக்கு!




ஆண்டாண்டுகாலம் மந்திரங்களை ஜபித்தாலும், மனிதத் தன்மை இல்லாமல் நடந்து கொண்டால், ஓட்டைப் பாத்திரத்தில் நீரை வைத்ததுபோல் ஆகிவிடும். முதலில் பூசை, தர்மம், தொண்டு எந்த அளவுக்கு முக்கியமோ, அந்த அளவிற்கு, பிறர் மனதை புண் படுத்தாமல், நாகரீகமாக வார்த்தைகளை பயன்படுத்துவதும் முக்கியம். அந்தப் பயிற்சியை ஒவ்வொருவரும் கற்றுக் கொள்ளவேண்டும். நலம் எண்ணி, நலம் உரைத்து நலமே செய்ய, நலமே நடக்கும்.




பொதுச்சொத்து அல்லது கோவில் சொத்தை கொள்ளை அடித்தால், சம்பந்தப்பட்டவர்களது, குடும்பம், வாரிசு பிற்காலத்தில், பைத்தியமாக வீதியில் அலைய வேண்டிவரும், அல்லது மிகப் பெரிய விபத்தில் உடல் உறுப்புக்களை இழக்கவேண்டி வரும், அல்லது மரணம்வரை படுத்த படுக்கையில் விழ வேண்டிவரும். பக்தியும், நம்பிக்கையும் இல்லாத இடத்தில் வெற்றி இல்லை.

நோயுள்ளவன்தான் மருந்து சாப்பிடவேண்டும். அது போல அவரவர் கர்மாவுக்கு, அவரவர் தான் பரிகாரம் செய்ய வேண்டும்.

நீங்கள் அனைவருமே, முன் ஜென்மங்களில் சித்தர்களிடம் உரையாடியவர்கள்தான், உறவாடியவர்கள்தான். அப்போது நீங்கள் எல்லாம் யாது கேட்டீர்கள்..?! என்றால், "எத்தனை பிறவிகள் எடுத்தாலும், உங்களை மறக்கக்கூடாது" என்று கேட்டீர்கள். எனவே, நீங்கள் மறந்தாலும், நாங்கள் யாரையும் மறக்கமாட்டோம். மறந்தும் கைவிடமாட்டோம், என்பதால் (நீங்கள் அனைவரும்) சித்த வழி தொண்டு செய்ய வேண்டும். அந்த வழியிலே இறையை காணவேண்டும். காரணமில்லாமல் பொறுத்திரு என்று அகத்தியன் கூற மாட்டேன். இது அவசரமான உலகம். பணம் கொடுத்தால் எதையும் சாதித்து விடலாம் என்று நம்புகிறார்கள். கலியுகம் என்பதால் அப்படி நடக்கவும் செய்கிறது. எப்போதைக்கு எப்போது எவன் ஒருவன் அகத்தியனிடம் முழு நம்பிக்கையோடு வந்து வாக்கு கேட்கிறானோ அவனை நானே கைபிடித்து தூக்கி அழைத்துச் செல்வேன்.

நம்பிக்கை இல்லாதவர்களைப் பற்றி பொருட்படுத்தவே மாட்டேன். ஏனெனில், என்னை நம்பி வருபவர்களுக்கு பிற்காலத்தில் எந்தவிதத் துன்பமும் வரக் கூடாது. அவர்களின் எதிர்காலத்தை பிரம்மாவிடம் கேட்டு பிரம்மாவின் அனுமதியோடு அவர்களுக்கு நல்லது செய்வேன். இதற்கு சில காலம் ஆகலாம். பலருக்கு பிரம்மா இரக்கப்படாமல் கூடப் போகலாம். பிரம்மா மறுத்துவிட்டால், அதை நான் அப்படியே என் பக்தர்களுக்கு சட்டென்று நான் சொல்லிவிடமாட்டேன். மீண்டும் பிரம்மாவின் மனதை சாந்தப்படுத்த முயற்ச்சிப்பேன்.



எனது வேண்டுகோளை பிரம்மா உடனடியாக ஏற்றுவிட்டால் என் பக்தர்களுக்கு உரிய எதிர்பார்ப்பை நிறைவேற்றி வைப்பேன். இது நடக்கும், நடக்காது என்று வெட்டு ஒன்று துன்று ரெண்டாக சொல்லும் பழக்கம் அகத்தியனுக்கு இல்லை, அப்படிச் சொல்ல ஆரம்பித்தால் நூற்றுக்கு ஒருவர், இருவரைத் தவிர வேறு யாருக்கும் எந்தக் காரியமும் நடக்காது. "பொறுத்திரு" என்று சொன்னால் அவர்களுக்காக அகத்தியன் போராடிக் கொண்டிருக்கிறேன் என்று அர்த்தம். பக்தர்கள் இதனைப் புரிந்து கொள்ள வேண்டும்.

விதியை மதியால் ஆய்வு செய்யலாம். ஆட்சி செய்ய முடியாது. அகுதொப்ப, விதி, மதி, என்பதையெல்லாம் தாண்டி, பிரார்த்தனை என்ற எல்லைக்கே வந்துவிடு. அது உன்னை கால காலம், காத்து நிற்கும். சென்றது, செல்ல இருப்பது என்றெல்லாம் பாராமல், உள்ளுக்குள் இறையை பார்த்து பழகு. பழகப் பழக, விதி உனக்கு சாதகமாக, அனுபவங்கள், மனோபலத்தை அதிகரிக்கும். மனோபலம் இல்லாது, தெய்வ பலம் கூடாது. சோதனைகளை தாங்கி நடந்து செல்ல, இறையருளால், கடைசியில் நலமே நடக்கும்.

நன்றி: சித்தனருள்
****************

சித்தர்கள், தமிழ் பற்றிய தகவல்கள் அடங்கிய கட்டற்ற களஞ்சியமாகத் திகழ்கின்றது திருச்சி, துறையூர் ஓங்காரக்குடில். நீங்களும் தொடர்பு கொள்ளலாம்.

ஓங்காரக்குடில் Ongarakudil
ஓங்காரக்குடில் - துறையூர்
113 நகர் விரிவாக்கம்
துறையூர்
திருச்சி - 621010
எம்மை கீழுள்ள இலக்கங்களில் தொடர்பு கொள்ளலாம். நன்றி
You may contact us on the following numbers. Thanks.
தொடர்பு : https://t.co/gatUoX0waL
 Aum Muruga ஓம் முருகா 

நன்றி


சித்தர் அறிவியல் Wisdom of Siththars

http://www.facebook.com/groups/siddhar.science/
தமிழ்ச்சித்தர்களின் அறிவியல் பற்றி
விழிப்புணர்வு ஏற்படுத்தும் குழுமம்.
Wisdom of Siddhas சித்தரியல்

Posted By Nathan Surya
 
    
#அகத்தீசர் #அகத்தியர்
சித்தர்கள் The Ascended Masters

ஓங்காரக்குடில் Ongarakudil
 

Comments

Popular posts from this blog

சித்தபெருமானார் அகத்தியர் வாக்கு