Posts

Showing posts from May, 2020

சித்தபெருமானார் அகத்தியர் வாக்கு

Image
சித்தபெருமானார் அகத்தியர் வாக்கு பொதுநலவாதிகளைவிட சுயநலவாதிகள்தான் சுகமாக வாழ்கிறார்கள் இன்றைய காலகட்டத்தில், ஏன் இந்த மாறுபட்ட நிலை..?! இறைவன் அருளால் சுகம் என்றால் என்ன? என்று நீ எண்ணுகிறாய் (மன நிம்மதி, வறுமையில்லாத நோய் நொடியில்லாத வாழ்வு). ஒன்றை புரிந்துகொள் ஒரு மனிதனுக்கு எந்த சூழலும் நிம்மதியையோ, சந்தோஷத்தையோ தருவதில்லை. https://www.facebook.com/groups/305917699863621 அவனுடையை மன நிலையை பொறுத்துதான் வாழ்க்கை நிலை என்பது நிறைய தனம்தான் சந்தோஷம் என்றால் தனவான்கள் அத்தனை பேரும் சந்தோஷமாக இருக்க வேண்டும். மிகப்பெரிய பதவிதான் நிம்மதி என்றால் பதவியில் இருக்கக்கூடியவர்கள் அனைவரும் நிம்மதியாக இருக்க வேண்டும். ஆக ஒவ்வொரு மனிதனின் மனநிலை, மன பக்குவம், மன முதிர்ச்சி - இதை பொறுத்துதான் சுகமும், துக்கமும் உன் மனதை நீ திடமாக, வைரம்போல் உறுதியாக, வைராக்யமாக, பெருந்தன்மையாக, நேர்மையாக நீதியாக, சத்திய நெறியில் வைத்துக்கொண்டால், இறை வழியில் செல்வதற்கு உன்னை தயார்படுத்திக் கொண்டால் நீ எங்கு இருந்தாலும் சுகமாக இருக்கலாம். நலமாக இருக்கலாம். எனவே சுகம் என்கிற லோகாய வ